சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா


சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா
x

குடவாசலில் சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் ஊராட்சி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 38-வது அமைப்பு தின விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இதில், சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகரன், அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் விக்னேஸ்வரர், ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் கோதையம்மாள் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story