சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வீரபாண்டி, மாவட்ட இணை செயலாளர்கள் மகபூப் பாஷா, சண்முகசுந்தரி, மருதபாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் பிச்சை, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல், மாவட்ட தலைவர் மணிகண்ட உலகநாதன், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் சீதாலட்சுமி, பொருளாளர் ஜெசிந்தா மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story