கடைகளில் அதிகாரிகள் சோதனை


கடைகளில் அதிகாரிகள் சோதனை
x

சாத்தான்குளம் பகுதியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் வட்டாரம் தட்டார்மடம் மற்றும் முதலூர் பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திர ராஜன், ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு ஆற்றுனர் ரொசாரியோ பாத்திமா மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படாத புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அழித்ததுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story