நாமக்கல் அருகேமோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


நாமக்கல் அருகேமோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள தூசூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியாயி (வயது73). இவர் நேற்று காலை சம்பாமேடு பகுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். தூசூர் ஏரிக்கரையில் கன்னிமார் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மாரியாயியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாரியாயி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது உறவினர் வனராஜீ (52) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story