சிங்கம்புணரியில் பாலத்தின் அடியில் முதியவர் பிணம்
சிங்கம்புணரியில் பாலத்தின் அடியில் முதியவர் பிணம் கைபற்றப்பட்டது.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள பாலாற்று பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story