அரசு பஸ் மோதி முதியவர் சாவு


அரசு பஸ் மோதி முதியவர் சாவு
x

சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா (வயது 70). இவர் நேற்று காலை சங்கரன்கோவில் - நெல்லை ரோட்டில் பெரிய கோவிலான்குளம் விலக்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் பொன்னையா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story