குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் சாவு


குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் சாவு
x

கண்ணமங்கலத்தில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் ராமகிருஷ்ண உடையார் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70).

இவர் நேற்று இரவு குடிபோதையில் தனது வீட்டருகே உள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இரவு நேரத்தில் யாரும் பார்க்காததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

இன்று காலை முருகேசனின் சகோதரர் விஸ்வநாதன், தண்ணீர் தொட்டியில் முருகேசன் இறந்து கிடப்பதை பார்த்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story