மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

சேத்துப்பட்டு அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் தனது மனைவி சரோஜா, பேத்தி நிஷா ஆகியோருடன் மொபட்டில் பத்தியாவரம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், சரோஜா, நிஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜேந்திரன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சரோஜா, நிஷா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story