விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x

பெரியகுளம் அருகே விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்

தேனி

பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 66).கடந்த 2-ந்தேதி இவர், அல்லிநகரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் எண்டப்புளிக்கு வந்து கொண்டிருந்தார். வடுகப்பட்டி அருகே முனியாண்டி கோவில் பகுதியில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தும்முத்தாய் தென்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story