கார் மோதி முதியவர் பலி


கார் மோதி முதியவர் பலி
x

கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 67). இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் ரெட்டிமாங்குடி சாலையில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு சிறுகனூரில் அவர் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரையும், அதனை ஓட்டிச்சென்ற டிரைவரையும் தேடி வருகின்றனர்.


Next Story