லாரி மோதி முதியவர் பலி


லாரி மோதி முதியவர் பலி
x

லாரி மோதி முதியவர் உயிாிழந்தாா்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டி திருவதிகை பழைய கடலூர் ரோட்டில் வசித்து வந்தவர் தியாகராஜன் (வயது 72). இவர் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டாில் தூக்கணாம்பாக்கம் சென்று விட்டு அங்கிருந்து மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவதிகை ஹவுசிங் போர்டு அருகில் வந்த போது அந்த வழியாக வந்த லாரி தியாகராஜன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story