மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா உடையார்பாளையம் மதுரா கிளியாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 85).

இவர் நேற்று மாலை குன்னுமுறிஞ்சி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story