ரெயில் மோதி முதியவர் பலி


ரெயில் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 21 March 2023 7:00 PM GMT (Updated: 21 March 2023 7:00 PM GMT)

எரியோடு அருகே ரெயில் மோதி முதியவர் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). நேற்று இவர் புளியம்பட்டி அருகே திண்டுக்கல்-கரூர் ரெயில் பாதையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற ஏதோ ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story