கதண்டு கடித்து மூதாட்டி சாவு


கதண்டு கடித்து மூதாட்டி சாவு
x

கதண்டு கடித்து மூதாட்டி இறந்தார்.

நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்பாள் (வயது65). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் பிடாரி கோவில் அருகில் உள்ள வயலுக்கு விவசாய பணிக்காக சென்றார். அப்போது சாலையோரம் விழுந்து கிடந்த பனைமட்டையில் இருந்த கதண்டு அவருடைய தலையில் திடீரென கடித்துள்ளது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு சேய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story