மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் மீது  பஸ் மோதி வாலிபர் பலி
x

பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

தேனி

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33). நேற்று இரவு இவர், கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து தேனிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் நஞ்சாவரம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கோபிநாத் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் தனியார் பஸ் டிரைவரான கேசவராஜபாண்டியன் (27) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story