மின்கம்பத்தில்மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி:நண்பர் படுகாயம்


மின்கம்பத்தில்மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி:நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:46 PM GMT)

மயிலாடும்பாறையில் மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

தேனி

மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). இதே கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ் (24). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் மயிலாடும்பாறையில் இருந்து மோட்டார்சைக்கிளில் மூலக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை பாலமுருகன் ஓட்டினார்.

மயிலாடும்பாறை போலீஸ் நிலையம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது, திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் செல்லும் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். யோகேசுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story