ெரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு


ெரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு
x

அம்பையில் ெரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை கல்லிடைக்குறிச்சி ெரயில் பாதையில் நேற்று மாலை 4 மணி அளவில் நெல்லை சென்ற ெரயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து வந்த தென்காசி ெரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் அம்பை மேலப் புதுத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story