எருது விடும் திருவிழா


எருது விடும் திருவிழா
x

கந்திலி அருகே எருது விடும் திருவிழா நடைபெறறது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் அருகே அனுயம்பட்டி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் கால்நடைகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தார். இதில் இரண்டு காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. காளை விடும் விழாவிற்கு முன்னாள் தலைவர் துரைசாமி, ஊர் கவுண்டர் பெருமாள், ஊர் நாட்டாமை பெரியசாமி அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் ராணிசின்னகண்ணு வரவேற்றார். ஒன்றியக்குழு துணை தலைவர் ஜி.மோகன்குமார் விழாவை தொடங்கி வைத்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர். காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு உள்பட 51 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், இளைஞரணியினர், எருது விடும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story