பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x

பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவல விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கயிலாய வாத்தியங்களுடன் கோவிலில் இருந்து தொடங்கிய கிரிவலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story