வரிகளை 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்


வரிகளை 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்
x

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கான வரிகளை 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர்வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை உரிம கட்டணம், உள்ளிட்ட வரிகளை வருகிற 30-ந் தேதிக்குள்(புதன்கிழமை) நகராட்சி அலுவலகத்தில் கட்டி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியாக ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story