பள்ளி மாணவர்களுக்கு பேனா
களக்காட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
களக்காடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு களக்காடு தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் நேற்று இடையன்குளம் அமீர் ஜமால் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கைக்கெடிகாரம், பேனா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில், களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதில் கணேஷ் குமார் ஆதித்தன், களக்காடு நகரச் செயலாளர் மணி சூரியன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சுடலை கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story