மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடம் 2-ம் தளத்திற்கு மாற்றம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடம் 2-ம் தளத்திற்கு மாற்றம்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடம் 2-ம் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிற காரணத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். வழக்கம்போல் பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் பதிவு செய்து கொண்டு இரண்டாம் தளத்திற்கு வந்து மனுக்களை அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் கோரிக்கை மனுக்கள் தரைத்தளத்தில் பெற்றுக்கொள்ளப்படும்.

மேலும், கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்கவும், கோரிக்கை மனுக்கள் எழுதும் இடத்தில் அனைவருக்கும் நீர் மோர் வழங்கவும், கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்க வருபவர்கள் வெயிலில் நிற்காத அளவிற்கு மேற்கூரைகள் அமைத்தும், அப்பகுதியில் குடிநீர் தொட்டி மற்றும் மண் பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டும் உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story