அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி


அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி
x

ராணிப்பேட்டையில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பல்வேறு துறைகள் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

அதை பஸ் நிறுத்தத்தில் இருந்த திரளான பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன் அடைந்தனர். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பு திட்டங்களான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், கல்லூரியில் படிக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள், திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் கலெக்டர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்த துறை சார்ந்த ஆய்வு புகைப்படங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கியமான கூட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இந்தப் புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ -மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் பார்த்தனர்.


Next Story