சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமி கர்ப்பம்

அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மகன் சிவசக்தி (வயது 23) கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2 மாதத்துக்கு முன் சிவசக்தி தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக அந்தியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயதை கேட்டபோது, அவர் 17 வயதான சிறுமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் அந்தியூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் புகார் அளித்தனர்.

தலைமறைவு

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்கள் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்றபோது, சிவசக்தி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 55 நாட்களாக சிவசக்தியை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று மதியம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டு இருந்த சிவசக்தியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தார்கள். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள்.


Next Story