ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்


ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்
x

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைபாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்தியப்பிரியா இல்லத்திற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வருகை நேரில் சென்றார். அப்போது மாணவியின் தாய் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சங்கர் ஜிவால் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் மாணவியின் கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாக கூறப்படுகிறது.


Next Story