பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்


பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்
x

பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பாக பலர், கோவிலுக்கு வருபவர்களிடம் யாசகம் பெறுவது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு சென்ற போலீசார், அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 மூதாட்டிகளை மீட்டு, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக மூதாட்டிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.


Next Story