மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சாவூர் ஒன்றியம் மற்றும் மாநகர குழு சார்பில் தஞ்சாவூர் ரெயிலடியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மீது கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story