நாகமலை சமைய கருப்பசாமி கோவிலில் பொங்கல் விழா
நாகமலை சமைய கருப்பசாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் நாகமலை சமைய கருப்பசாமி கோவில் பொங்கல் விழா நடைபெற்றது. கடந்த 13 வருடங்களாக பொங்கல் விழா நடைபெறாத நிலையில் சமீபத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெற்றது. பூஜைப்பெட்டி ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story