நிலக்கோட்டை, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் 21-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


நிலக்கோட்டை, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் 21-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x

நிலக்கோட்டை, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் 21-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் 21-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியக்காரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் துணை மின்நிலையத்தில் 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் பிள்ளையார்நத்தம், நி.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ் காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணா மில், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னாளப்பட்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story