பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தியாகராயநகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெரு.

கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, எஸ்.எஸ்.பி. நகர், அழகர் பெருமாள் கோவில் தெரு, அருனா காலனி, அசோக் நகர் 77-வது தெரு முதல் 92-வது தெரு வரை, சர்வமங்களா காலனி, கண்ணப்பர் சாலை, புதூர் தெருக்கள், ஒட்டகபாளையம் 1-வது முதல் 13-வது வரை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை தெரு, கருநாகர் தெரு, கலிங்கா காலனி, பாலசுப்பிரமணியம் சாலை, ருக்மணி தெரு.

அண்ணா நகர்:பி.பிளாக் முதல் ஜி.பிளாக் வரை, உதயம் காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, பொன்னி காலனி, ஜெயந்தி காலனி, டவர் வியூ காலனி, கார்டன் வியூ அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகர் கிழக்கு பகுதி, போலீஸ் ஏ.சி. குடியிருப்பு, அம்பேத்கர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, அன்னை சத்யா நகர், விளாங்காடு இடுகாடு.

அம்பத்தூர்: அயபாக்கம், தனக்கலா கேம்ப், அயப்பாக்கம், சீனிவாசன் நகர், அத்திப்பட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை 2-வது மெயின் ரோடு, தொழிற்பேட்டை 2-வது குறுக்கு மெயின் ரோடு.

போரூர்: பூந்தமல்லி ட்ரன்க் சாலை, வைதீஸ்வரன் கோவில் தெரு, புது தெரு, கங்கா சாரதி நகர், நண்பர்கள் நகர், வசந்தபுரி.

தண்டையார் பேட்டை: திருவெள்ளவாயல் காட்டுப்பள்ளி, வாயலூர், திருபாலைவனம், செங்கழனீர்மேடு, ராமநாதபுரம், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம் டோல்கோட் நார்த் டெர்மினல் சாலை, டி.எச்.சாலை, சுடலைமுத்து தெரு, தேசிய நகர், நாகூரான் தோட்டம், வெங்கடேசன் அலி தெரு, பூண்டித்தங்கம்மாள் தெரு, ஆவூர் முத்தய்யா தெரு.

ஆவடி: திருமுல்லைவாயல் வேல்லானூர், சிட்கோ திருமுல்லைவாயல் பெண்கள் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட், கன்னடபாளையம், ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.சாலை, எடப்பாளையம், சிவந்தி ஆதித்தனார் நகர்.

பொன்னேரி: எலியம்பேடு பெரிய காவனம், வைரவன்குப்பம், மூகாம்பிகை நகர்.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story