சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தை அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆண்டிமடம்-விளந்தை மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீசுவர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story