'தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி' - வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு


தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி - வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
x

2024ல் மீண்டும் 300-க்கும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

வேலூர்,

வேலூரில் நடைபெற்று வரும் பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் நடைபெறவில்லை. காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள். காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் எய்ம்ஸ் கொண்டு வரவில்லை. திமுக 18 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தும் ஏன் ஒரு எய்ம்ஸ் கூட தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. திருக்குறளை 23 மொழிகளில் மொழி பெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழி செய்திருக்கிறார்

நீட், சிஆர்பிஎஃப் உள்ளிட்ட மத்திய தேர்வுகளை தமிழில் நடத்தி வருகிறோம். 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.2.47 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகர்களின் தொன்மையான செங்கோல் நிறுவி சாதனை செய்துள்ளோம். மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2024ல் மீண்டும் 300க்கும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சி அமைய உள்ளது.

தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் ரூ.2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மானியமாக ரூ.2.38 லட்சம் கோடி வழங்கியுள்ளோம். பாரதத்தை வளர்ச்சி பாதையில் பாஜக கொண்டு செல்கிறது. தமிழ்நாட்டில் மெட்ரோ திட்டங்களுக்காக ரூ.72,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்க ரூ.58,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை. அண்ணாமலையின் செயல்பாட்டால் 25 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் தோறும் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைகு எனது பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story