கடலூரில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


கடலூரில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x

கடலூரில் வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர்,

கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பார்த்திபன் (வயது 22). இவர் திருபுவனத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் முருகன், பார்த்திபனை கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த பார்த்திபன், தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story