தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை செல்வராஜ் எம்.பி., குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 2,035 பேரில் 669 பேர் பணி நியனம் பெற்றனர்.முன்னதாக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஹேமலதா வரவேற்றார். இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் பாலன், சீனிவாசன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story