தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:45 PM GMT)

புளியங்குடியில், நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8-30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.

இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இம் முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் இந்த நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறலாம்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகைக்கான விண்ணப்பமும் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.

நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் https://tinyurl.com/tenkasi2023 என்ற கூகுள் படிவத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்த பின் தங்கள் மின்னஞ்சலுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணுடன் முகாமில் கலந்து கொள்ளவும். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் வேலை அளிப்போர்கள் விவரம் அறிய

https://www.decgctenkasi.com/mega.job.fair.2023 என்ற இணைப்பை பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story