பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
x

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர். எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் முகாமில் கலந்து கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story