பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:45 PM GMT)

தென்காசியில் நடைபெற்று வந்த அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி நிறைவு விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார்.

தென்காசி

தென்காசியில் நடைபெற்று வந்த அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி நிறைவு விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார்.

சாதனை விளக்க கண்காட்சி

தென்காசி இ.சி ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்காட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தினமும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கலெக்டர் பேச்சு

நிகழ்ச்சியில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பேசியதாவது:- ஓயா உழைப்பில் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி எனும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 10 நாட்களாக தென்காசியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இங்கு ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மேலும் அரசு திட்டங்கள் குறித்தும் சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசுகள்

நிகழ்ச்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும், இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பரதாலயா, புருஷோத்தமன், நாட்டியக்குழு, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கும், கலெக்டர் பரிசு கேடயங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் கே.என்.எல். சுப்பையா, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story