பொதுக்கழிவறை கட்டுவதில் பிரச்சினை; முற்றுகை போராட்டம் வாபஸ்


பொதுக்கழிவறை கட்டுவதில்  பிரச்சினை; முற்றுகை போராட்டம் வாபஸ்
x

பொதுக்கழிவறை கட்டுவதில் பிரச்சினையில் ஏற்பட்டதில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 8-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு கோவில் அருகே பேரூராட்சி சார்பாக பொதுக்கழிவறை கட்டுவதற்கு முயற்சி நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையடுத்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டம் அறிவித்தவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோவில் அருகே பொதுக்கழிவறை கட்டாமல் பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி மாற்று இடத்தில் பொதுக்கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக இருந்தது வாபஸ் பெறப்பட்டது.


Next Story