நலத்திட்ட உதவிகள்


நலத்திட்ட உதவிகள்
x

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

முன்னாள் தமிழ்நாடு கல்வி மானியக்குழு உறுப்பினரும், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளருமான காபிரியேல் ஜெபராஜனின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காபிரியேல் ஜெபராஜனின் மணிமண்டபத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை‌ தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கண்டித்தான்குளத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இலவச வீடு திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. பின்னர் பாஸ்டர் சைமன் தலைமையில் கன்வென்ஷன் கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கினார். பேரின்பபுரம் சேகரகுரு செல்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். இதில் குருவானவர்கள் ஒமநல்லூர் ராஜேஷ், சடையமான்குளம் பன்னன் சாலமோன், பூக்குழி ஸ்டீபன் ராஜசேகர், ஆண்ட்ரூஸ் லேண்ட் புரோமேட்டர்ஸ் ஆரைக்குளம் ஆண்ட்ரூஸ், செட்டிகுளம் பாலையா, சிங்கப்பூர் ஜானி, சென்னை ஜெ.பி.இன்டஸ்ட்ரீஸ் ஜான் ஜஸ்டின், வி.ஏ.ஓ. சுடலைமுத்து, எஸ்கால் வென்ஜர்ஸ் ரோஜர் சத்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை டாக்டர் தேவா காபிரியேல் ஜெபராஜன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஜெ.ஜெ.ஜெ.சாமுவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மெர்ஸி ராஜன் குரூப் ஆப் கம்பெனிகளின் சேர்மன் மெர்ஸி ராஜன் செய்திருந்தார்.


Next Story