அமைச்சர் ரகுபதி மீதான போராட்ட வழக்கு ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் ரகுபதி மீதான போராட்ட வழக்கு ரத்து: ஐகோர்ட்டு  உத்தரவு
x

அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கடந்த 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story