வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்


வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சச்சின் டி.ஷெட்டி தலைமையில், 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்' (வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும்) கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் 'ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. 'பி' காலனி, திருநெல்வேலி-627007' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மனுவின் மீது 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்' மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 30-ந்தேதிக்குள் (புதன்கிழமை) இந்த அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்' கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும். வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும், வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும். எனவே மனு அனுப்பியவர்கள் மேற்கண்ட கால அட்டவணைப்படி வருங்கால வைப்புநிதி ஆணையாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் எம்.குமாரவேல் தெரிவித்துள்ளார்.


Next Story