போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் முதல் புதன்கிழமை மற்றும் 3-வது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களிடம் மனுக்களை நேரடியாக பெற்று, அதன் மூலம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனே விசாரணை செய்ய அறிவுறுத்தினார். இந்த முகாமில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story