சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
போத்துகொல்லி-பைங்கால் இடையே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே பைங்கால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு போத்துகொல்லியில் இருந்து பைங்கால் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் பைங்கால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழுதடைந்த சாலையால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கிராமங்களுக்குள் செல்வது இல்லை, இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சாலையை சீரமைக்காவிட்டால் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story