பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 2 July 2023 6:30 PM GMT (Updated: 3 July 2023 7:04 AM GMT)

பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் பவுர்ணமி கிரிவலம் கோவிலில் இருந்து தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் இரவு 7 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்று வட்டார கிராம மக்கள், சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story