செந்துறை அருகே ஆற்றில் கிடந்த மலைப்பாம்பு


செந்துறை அருகே ஆற்றில் கிடந்த மலைப்பாம்பு
x
தினத்தந்தி 27 Feb 2023 8:30 PM GMT (Updated: 27 Feb 2023 8:30 PM GMT)

செந்துறை அருகே முடிமலை ஆற்றில் கிடந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

திண்டுக்கல்

செந்துறை அருகே முடிமலை ஆற்றின் கரையோரம் நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையில் சிறப்பு அலுவலர் அம்சராஜன் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது ஆற்றில் கிடந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை, அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் தர்மராஜ் ஆகியோரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை அய்யலூர் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.


Related Tags :
Next Story