மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்


மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்

சென்னை,

சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.இந்த நிலையில் இது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

கடந்த ஆண்டுகளைப் போல் மழைவெள்ளப் பாதிப்பு இல்லாத நிலையை உறுதிசெய்ய மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன.

வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்தும், தரத்தில் குறைவின்றியும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story