ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்


ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்
x

இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்.

ராமநாதபுரம்

இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்.

6 மீனவர்கள் கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர்.

இதனால் துறைமுக கடல் பகுதியில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன..

கண்டன ஆர்ப்பாட்டம்

விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story