கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜனதா சார்பில் நிவாரணம்


கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜனதா சார்பில் நிவாரணம்
x

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜனதா சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜனதா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதைெயாட்டி கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் இளையராஜா அணைக்கொடி, அரங்கோட்டை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் அணைக்குடி கிராமத்தில் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பா.ஜனதா மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story