நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு


நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
x

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். இதில் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சித்தர் செல்வன் (வயது 29), முகி (27), மதுபாலன் (19), முருகன் (57), சிவா (30) ஆகிய 5 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் சுமார் 20 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது படகின் அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு படகுக்குள் கடல் நீர் புகுந்தது. சிறிது நேரத்தில் படகு முழுவதும் நீர் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. இதனால் அதில் சென்ற 5 மீனவர்களும் படகில் உள்ள டீசல் கேன் மற்றும் மரப்பலகை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு தங்களது படகில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினர்.


Next Story