வேளாண்மைத்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


வேளாண்மைத்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

வேளாண்மைத்துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:- சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலக்கை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைவார்கள். அந்தவகையில் அலுவலர்களின் பணி இருக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டப் பணிகள் மற்றும் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் ஆகிய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Next Story